சிவகங்கை, மார்ச் 28: சிவகங்கை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை அருகே மதுரை சாலை பகுதியில் கடந்த கடந்த 25ம் தேதி இரவு டூவீலரில் வந்த மதுரை வரிச்சியூரை சேர்ந்த செக்கடியான்(38), மழவராயனேந்தலை சேர்ந்த மகளிர் போலீஸ் புவனேஸ்வரியின் கணவர் மோகனசுந்தரேஸ்வரன்(35) ஆகியோரை வாளால் தாக்கி நகை மற்றும் செல்போன், பணத்தை மூன்று வாலிபர்கள் பறித்துச் சென்றனர். சிவகங்கையை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அரவிந்த்(23) என்பவரை வழி மறித்து விரட்டியதில் அவர் சாலையோர ஹோட்டல் முன்பு இருந்த போர்டில் மோதி காயமடைந்தார். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.