பொன்னேரி, மார்ச் 26: மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம், ஒன்றிய செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன் தலைமையில் காணியம்பாக்கம் பஜாரில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் மீஞ்சூர் சுப்பிரமணி, கூளூர் கதிரவன், எம்.எல்.ரவி, வைதிகை செல்வ சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டார். பின்னர், கல்வெட்டுகளை திறந்து வைத்து, கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.