திருத்தணி: திருத்தணி காந்திரோடு பகுதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயிலில் திருவிழா நேற்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, கணபதி, நவகிரக ஹோமம், கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.