கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் உள்ள பாசன வாய்க்காலில் மீன்கள் அதிகளவு செத்து மிதக்கிறது. கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணியில் இருந்து கட்டளை மேட்டு வாய்க்கால் மூலமாக கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், லாலாபேட்டை, குளித்தலை வழியாக செல்கின்றது இதன் மூலம் ஆயிரத்துக்கு மேற்பட்ட விளைநிலங்கள் பயன் பெற்று வருகின்றது. மேலும் மாயனூர் காவிரி கதவணையில் இருந்து பாசன வாய்க்கால் மூலம் திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் பாசன வாய்க்காலில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் ஏராளமான மீன்கள் இருந்ததால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் வலை விரித்து மீன்களை பிடித்து சென்றனர்.