தபால்துறை குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 21: கிருஷ்ணகிரியில் வரும் 30ம் தேதி கோட்ட அளவிலான தபால்துறை சார்ந்த குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட அளவிலான தபால்துறை சார்ந்த குறை தீர்ப்பு நாள் கூட்டம் வருகிற 30ம் தேதி காலை 11 மணியளவில் கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அஞ்சலக வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகார்களை “தக் அதாலத்” என தபால் உறையின் மீது எழுதி வரும் 23ம் தேதிக்குள் சூப்பிரண்ட் ஆப் போஸ்ட ஆபிஸ், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

அனுப்பும் புகார்களில் முழு விவரங்களும், அதாவது தபால் அனுப்பிய தேதி, அனுப்புநர் மற்றும் பெறுநர் விலாசம் போன்றவை குறிப்பிட வேண்டும். பதிவு தபால், எம்ஓ., விபி., இன்சூர்டு லெட்டர் மற்றும் விரைவு தபால் ஆகியவைகளுக்கு பதிவு எண், பதிவு செய்யப்பட்ட அலுவலகம், விலாசம் போன்றவை குறிப்பிட வேண்டும். அஞ்சல் சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களுக்கு கணக்கு எண், பாலிசி எண், கணக்கு வைத்திருப்பவர், காப்பீட்டாளரின் பெயர் மற்றும் விலாசம், அஞ்சல் அலுவலகத்தின் பெயர், பணம் செலுத்தப்பட்ட விபரம் போன்றவை குறிப்பிட வேண்டும். இவ்வாறு கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: