நெல்லை, மார்ச் 22: மண் வளம் மிக்க காடுகளை காப்பது அனைவரின் கடமையாகும் என நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நடந்த உலக வனநாள் விழாவில் கலெக்டர் கார்த்திகேயன் பேசினார். பாளை கொக்கிரகுளத்தில் செயல்படும் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நெல்லை மாவட்ட வனத்துறை சார்பில் உலக வன நாள் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட வன அலுவலரும், வன உயிரினக்காப்பாளருமான முருகன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற நெல்லை கலெக்டர் கார்த்திகேயன், இதையொட்டி வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில் ‘‘நெல்லை மாவட்டம் மிகவும் தொன்மைவாய்ந்து.