ஆவடி: ஆவடியை அடுத்து பட்டாபிராம் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(32) இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவர் அரசு டெண்டர் வாயிலாக, பட்டாபிராம் அடுத்த அமுதூர்மேடு கிராமத்தில், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வேலைக்கு வந்தார். அப்போது, சைட்டில் வைத்திருந்த 10 இரும்பு ஜாக்கிகள் திருடு போனது தெரிந்தது.