திருத்துறைப்பூண்டி, மார்ச் 21: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி ஊராட்சியில் நடைபெற்ற 3வது சுற்று முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
தமிழ்நாடுஅரசு கால்நடை பாரமரிப்புத்துறை தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் தடுப்பு திட்டத்தின்கீழ் 3வது சுற்று கோமாரி நோய் தடுப்பு முகாம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூ உத்தரவின்பேரில் கால்நடை பாரமரிப்புத்துறை இணை இயக்குனர் ஹமீதுஅலி, உதவி இயக்குனர் ராமலிங்கம் வழிகாட்டுதலின்படி கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.