மதுபோதையில் வாக்குவாதம் குமுளியில் வாலிபர் குத்திக்கொலை: 2 பேர் கைது

கூடலூர், மார்ச் 21: மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் குமுளியில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக குமுளி மற்றும் கம்பத்தைச் சேர்ந்த இருவரை குமுளி கேரள போலீசார் கைது செய்தனர். குமுளி ரோஜாப்பூகண்டத்தில் குடியிருந்து வருபவர் ருக்மான் அலி(36). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் குமுளி டவுனில் உள்ள பார் அருகே சாலையோரம் கத்தியால் குத்திய நிலையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் குமுளி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார்கள் குமளியைச் சேர்ந்த ராஜேஷ், கம்பத்தைச் சேர்ந்த காதர் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மது அருந்தியதால் ஏற்பட்ட வாக்குவாதமே கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணயில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: