பல்லடம், மார்ச் 21: பல்லடத்தில் பால் மட்டும் அருந்தி உயிர் வாழும் மாற்றுத்திறனாளியின் வாழ்வாதாரத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவியுள்ளார். மேற்கு பல்லடத்தில் வசிக்கும் வசந்த்குமார் (42) என்பவர் டீ மாஸ்ராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி தேவி (36) ஆகியோரின் மகன் அபினேஷ் (20) உடல் வளர்ச்சி இன்றியும், காதும் இல்லாமலும் வாய் பேச முடியாமலும் பெற்றோர் பராமரிப்பில் உள்ளார். மேலும் இவர் உடல் பிரச்னை காரணமாக பால் உள்ளிட்ட திரவ உணவுகளை மட்டுமே அருந்துகிறார். இவருக்கு உணவிற்காக தினசரி 3 லிட்டர் பால் தேவைப்படுகிறது. அபினேஷ் மற்றும் அவரது தந்தை வசந்த்குமார் ஆகியோர் சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.