க.பரமத்தி: கரூர் மாவட்டத்தில் ெவவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த தென்னிலை அருகே குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் கருப்பண்ணன் (33). இவர் சொந்த வேலையாக தனது ஊரில் நடந்து வந்தபோது எதிர்பாரதவிதமாக தானே நிலை தடுமாறி கிழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த இவரது உறவினர்கள் கருப்பண்ணனை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.