திருப்பூர், மார்ச் 20: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜம்மனை பள்ளம் பகுதியில் மேயர் தினேஸ்குமார் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி செய்து வருகிறார். குறிப்பாக பொதுமக்கள் அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு கண்டு வருகிறார்.