பல்லடம், மார்ச் 20: திருப்பூர் ரோட்டரி சங்கங்கள், பொது நல அமைப்புகள் மற்றும் தமிழக அரசு. திருப்பூர் மாநகராட்சி ஆகியவை சார்பில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.90 கோடியில் இந்தியாவிலேயே அதி நவீன மருத்துவ கருவிகளுடன் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய உள்ளது. இம்மையத்திற்கு மும்பை இ.சி.ஜி.சி அமைப்பின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம்.செந்தில்நாதன் ரூ.2 கோடிக்கான காசோலையை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் வழங்கினார்.