கல்லூரி மாணவி மாயம்

விழுப்புரம், மார்ச் 19: விழுப்புரம் அருகே பாணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகள் வரலட்சுமி(21). இவர் கடலூர் அரசு கலை கல்லூரியில் எம்ஏ வரலாறு 2ம் ஆண்டு படித்து

வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து சுந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: