வல்லம், மார்ச்19: தஞ்சாவூர் பாங்க் ஸ்டாப் காலனி, 7வது தெருவை சேர்ந்த உலகேசன் என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன் (47). இவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதிகள் துறையில் தமிழ் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி வளர்மதி.கடந்த 14ம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்ற பாலசுப்பிரமணியன் அன்று மாலை வீட்டுக்கு வரவில்லை. மறுநாள் 15ம் தேதி மாலை காயங்களுடன் பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வளர்மதி அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அதற்கு கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பும்போது யாரோ கடத்திச் சென்று வல்லம் பகுதியில் வைத்து தன்னை தாக்கியதாக தெரிவித்து விட்டு பாலசுப்பிரமணியன் மயங்கி விழுந்துள்ளார்.தொடர்ந்து வளர்மதி தனது கணவரை தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். 17ம் தேதி கண்விழித்த பாலசுப்பிரமணியனிடம் நடந்தது குறித்து விசாரித்துள்ளார்.