கல்லூரி மாணவி கடத்தல்

ஓசூர், மார்ச் 19: ஓசூர் காளேகுண்டா பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, தனியார் கல்லூரியில், முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் ஓசூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதில், வாணியம்பாடியை சேர்ந்த ஆகாஷ் (20) என்பவர், தங்களது மகளை கடத்தி சென்றதாக சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: