தொழிலாளி மாயம்

கிருஷ்ணகிரி, மார்ச் 19: கெலமங்கலம் அருகே, தடிக்கல் அடுத்த பெரியசாதனக்கல் பகுதியை சேர்ந்தவர் சிவா (32), கூலி தொழிலாளி. கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சிவா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மாதம்மாள் அளித்த புகாரின்பேரில், கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: