தஞ்சாவூர், மார்ச் 18: ஊதிய ஒப்பந்தம், காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 ம் தேதி சென்னையில் நடைபெறும் கோட்டை நோக்கி பேரணியை விளக்கி வாயிற்கூட்டம் தஞ்சாவூரில் மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற 1.12.2019 முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும், காலியாக உள்ள 56,000 ம் காலிப்பணியிடங்களை நிரப்புவது, அரசாணை எண் 100 ன் படி பணியாளர்கள், ஓய்வூதியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், மின்வாரிய ஊழியர்கள் பெற்று வந்த 23 சலுகைகளை பறிக்கின்ற வாரிய ஆணை எண் 2ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும், அவுட்சோர்சிங், ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்,