போச்சம்பள்ளி, மார்ச் 18: போச்சம்பள்ளி பகுதியில் செம்மண் பூசி பதப்படுத்தப்பட்ட காராமணி விற்பனை அமோகமாக உள்ளது. இதன்மூலம் கூடுதல் வருவாய் கிடைப்பதால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனஹள்ளி, பர்கூர், போச்சம்பள்ளி, மத்தூர், கல்லாவி, சாமல்பட்டி, பண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஹெக்டேரில் கொள்ளு, 60 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்து, காரமணி, பச்சை பயறு, துவரை உள்ளிட்ட பயறு வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். போச்சம்பள்ளி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாந்தோட்டங்களில் ஊடுபயிராகவும், மானாவாரியாகவும் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு பெய்த மழையால் மகசூல் அதிகரித்தது. ஒரு கிலோ காராமணி கிலோ ₹65 முதல் ₹70 வரை விற்பனையானது.