விவசாயிகள் வசதிக்காக பாசன நீர் கால்வாய் அமைப்பு பணி தீவிரம்

கூடலூர், மார்ச் 17:  கூடலூர் அருகே மாணிக்கல்லாடி கிராமத்தில் விவசாயிகள் வசதிக்காக பாசன நீர் கால்வாய் அமைக்கும் பணிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மாணிக்கல்லாடி கிராமத்தில் பாசன நீர் கால்வாய் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, நீர்வளத்துறை சார்பில்  விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசன நீர் கால்வாய் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. எஸ்ஏடிபி திட்டத்தின் கீழ் 200 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து இப்பணிகளை நேற்று நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு ஊழியர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Related Stories: