குடியாத்தம் மார்ச் 15: குடியாத்தத்தில் மளிகைக்கடையில் புகுந்து பணம் மற்றும் மளிகை பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் போஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜோதி(45), அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் ஜோதியை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து, நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது, கடையில் இருந்த பணப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்த ரூ.5 ஆயிரத்தை காணவில்லை.