தஞ்சை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு 26,000 பேர் எழுதினர்

தஞ்சாவூர்,: தமிழகத்தில் நேற்று பிளஸ் 1 பொது தேர்வு தொடங்கியது. அடுத்த மாதம் 5ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 225 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 804 மாணவ, மாணவிகள் தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர். காலையிலே மாணவ- மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். செல்போன், கால்குலேட்டர் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. கடும் சோதனைக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 10 பணிக்கு தேர்வு தொடங்கியது. மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.

தேர்வு பணியில் 112 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், 112 துறை அலுவலர்கள், 7 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 27 வழித்தட அலுவலர்கள், 139 நிலையான பறக்கும்படை உறுப்பினர்கள், 1961 அறை கண்காணிப்பாளர்கள், 194 சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 225 அலுவலக பணியாளர்கள் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் தடையில்லா குடிநீர், மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது. தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக பேருந்துகள் இயக்கப்பட்டன.

Related Stories: