தா.பழூர்: தா. பழூர் சிவாலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாத சுவாமி கோயிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு காலை முதல் பால், தயிர், நெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, அருகம்புல் பொடி, கரும்பு சாறு, பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை காலபைரவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.