கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் 114 மாணவ, மாணவிகள் 11ம் வகுப்பு தேர்வெழுதினர்

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பொது தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 114 மாணவ, மாணவிகள் முதல் தேர்வான தமிழ் மொழி தேர்வு எழுதினார்கள். தேர்வு அறையில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது சுபிக்ஷா என்ற மாணவி தேர்வு நேரம் முடிவதற்கு முன்பு சுமார் அரை மணி நேரம் இருக்கும்போது திடீரென மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக தேர்வறையில் இருந்த ஆசிரியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து பின் 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவியின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது பெற்றோர்கள் கூறுகையில் மாணவிக்கு இதுபோன்று மயக்கம் சில சமயங்களில் வருவதாக தெரிவித்தனர். பின்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த மாணவி சுபிக்ஷா நலமுடன் உள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தனர். தேர்வறையில் மாணவி மயக்கம் அடைந்ததை அடுத்து சிறிது நேரம் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியாக பள்ளி வளாகத்தில் இருந்து வெளியே வந்தனர்.

Related Stories: