இன்று பிளஸ்1 தேர்வு துவக்கம் 20,159 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்

கிருஷ்ணகிரி, மார்ச் 14: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று(14ம் தேதி) துவங்கும் பிளஸ் 1 பொதுத்தேர்வினை 87 மையங்களில் 20,159 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. தொடர்ந்து இன்று(14ம் தேதி) 11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. வரும் ஏப். 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் கல்வி மாவட்டத்தில் 35 அரசு பள்ளிகள், 33 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 72 பள்ளிகளில் பயிலும் 7,887 மாணவ, மாணவிகள் 36 தேர்வு மையங்களிலும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 71 அரசு பள்ளிகள், 1 அரசு நிதியுதவி பெறும் பள்ளி, 46 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 120 பள்ளிகளில் பயிலும் 12,272 மாணவ, மாணவிகள் 51 மையங்களிலும் என மாவட்டத்தில் மொத்தம் 87 மையங்களில் 20,159 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 145 பறக்கும்படையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Related Stories: