வேலாயுதம்பாளையம், மார்ச் 13: தமிழகம் முழுவதும் 1000 காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் வாங்கல் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தவிட்டுப்பாளையம், கூலகவுண்டனூர் , புகளூர்உள்ளிட்ட பல்வேறு பள்ளிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கான சிறப்பு காய்ச்சல் பரிசோதனை மருத்துவமுகாம் நடைபெற்றது. முகாமில் வாங்கல் வட்டார மருத்துவர் டாக்டர் சுரேந்திரன் தலைமையில் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர், முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் வைரஸ் காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்தனர்.