திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே திருப்பூரில் வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக, 95 டிகிரிக்கும் குறையாமல் ெவயில் இருந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். காலை துவங்கும் வெப்பத்தின் உக்கிரம் மாலை வரை குறைந்தபாடில்லை. குறைந்த பட்சமாக 90 டிகிரியும், அதிகபட்சமாக 95 டிகிரி வரையும் வெயில் கொளுத்துகிறது. காலை 10 மணிக்கே சாலையில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமையால் வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். வெயில் கொடுமையால் குளிர்பானங்களை மக்கள் தேடி அலைகின்றனர்.