ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட குழுக்கூட்டம்

அவிநாசி:  அவிநாசியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டக்குழுக்கூட்டம் மாவட்ட தலைவர் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சென்னியப்பன் வரவேற்றார். கூட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் நந்தகோபால், வட்டார தலைவர்கள் அவிநாசி சோமசுந்தரம், தாராபுரம் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநிலத்தலைவர் சீதாராமன் சங்க கொடியேற்றிவைத்தார்.

கூட்டத்தில், மகளிர்தினவிழா, மாவட்ட நிர்வாகிகள் தேர்தல், மாநில சங்க கட்டட நிதியளிப்பு விழா ஆகியன நடைபெற்றது.

கூட்டத்தில், அவிநாசி உதவி கருவூல அலுவலர் அனித்ராதர்ஷிணி, மாநில மகளிரணி அமைப்பாளர் ரங்கநாயகி, மாநிலபொறுப்பாளர்கள் பக்தவத்சலம், செல்லமுத்து, பணிநிறைவு ஆசிரியர் கூட்டமைப்பு மாநில தலைவர் சுப்ரமணியம், கோவை மண்டல செயலாளர் பூவலிங்கம், மத்திய செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், சென்னை மாவட்ட பொறுப்பாளர் அன்னியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.  கூட்டத்தில் 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத்தொகையை வழங்கவும், 70-வயது முடிந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.  

Related Stories: