கரூர்: கரூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் பிரிவில் சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் முக்கிய நெடுஞ்சாலையாக சேலம் மதுரை பைபாஸ் உள்ளது. கரூர் மாவட்டம் வழியாக செல்லும் இந்த பைபாஸ் சாலையில் நிமிடத்துக்கு நிமிடம் வாகனங்கள் ஒய்வின்றி சென்று வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியின் வழியாக செல்லும் இந்த பைபாஸ் சாலையில் மண்மங்கலம் பிரிவு அருகே நான்கு வழிப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.