திருப்பூரில் இன்று தடகள போட்டி தேர்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜகோபால் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா திட்ட நிதி உதவியில் தொடக்க நிலை தடகள பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் 15 முதல் 30 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  இந்த திட்டத்தில் திறமை வாய்ந்த பயிற்சியாளரை கொண்டு தடகள பயிற்சி வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் இன்று (10ம் தேதி) காலை 9 மணிக்கு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கும் தடகள தேர்வு போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 74017-03515 என்ற செல்போன் என்னை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: