கரூர்: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் மாசி மகத் திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு நேற்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலையில் புகழ்பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி தேரோட்ட விழாவும், மாசி மகத் திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள். இதனடிப்படையில், கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் நேற்று மாசி மகத் திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி பிப்ரவரி 26ம் தேதி அன்று காலை கோயிலில் நடைபெற்றது.