காங்கயம்: வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (50). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை தொடர்ந்து காங்கயம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.