புதிய தமிழகம் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்

உடுமலை: புதிய தமிழகம் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் உடுமலையில் நேற்று நடந்தது. மாநில துணைப் பொதுச்செயலாளர் சுப்ரமணியம், நிர்வாகிகள் சங்கர் குரு, விஜயகுமார், தமிழ்மணி, மகாலிங்கம், கலையரசி உள்பட பலர் பேசினர். சின்னச்சாமி, பன்னீர்செல்வம், மணிகண்டன், சந்திரன், மனோகரன், மாணிக்கமுத்து, ராஜா, கவின், பொன்னாண்டவர், தங்கபாலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஏப்ரல் 3ம் தேதி உடுமலையில் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.

Related Stories: