திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.35லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து நேற்றுஇரவு இண்டிகோ விமானம் வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை விமான நிலையத்தின் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஆண் பயணி ஒருவருக்கு சொந்தமான சூட்கேஸில் 629 கிராம் எடையிலான தங்க செயின்களை மறைத்து கொண்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.35 லட்சத்து 23 ஆயிரம் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டது.
