கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் உயர்மட்ட பாலத்தின் நடைபாதையில் இரவு நேரங்களில் சிலர் குடிபோதையில் படுத்து தூங்கும் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் அருகே அமராவதி ஆறு பயணிக்கிறது. கரூர் மற்றும் பசுபதிபாளையம் போன்ற பகுதிகளை இணைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் பயன்பாட்டில் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், பாலத்தின் இருபுறமும் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை உள்ளது.