திருமானூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

அரியலூர், மார்ச் 2: அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மரிய மைக்கேல்ராஜ். இவர், தான் குடியிருக்கும் தெருவில் சுமார் 2 மீட்டர் அளவுக்கு ஆக்கிரப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சாக்கடை தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்பதாகவும், அதனால், பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், மாற்றுத்திறனாளியான நான், எனது மூன்று சக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லகூட முடியவில்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் அண்மையில் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேன் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், காவல்துறையின் பாதுகாப்புடன் அந்த தெருவை அளவீடு செய்து, நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Related Stories: