திருப்பூர், பிப்.26: பின்னலாடை நகரான திருப்பூரில் தமிழகம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அருகில் உள்ள மாவட்டங்களான கோவை மற்றும் ஈரோட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தினமும் பேருந்துகள் மற்றும் ரயில் மூலமாக திருப்பூருக்கு வந்து பணியாற்றி வருகின்றனர்.
பனியன் நிறுவனங்கள், குடோன்கள், விற்பனை அங்காடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் பணியாற்றி வரக்கூடிய சூழ்நிலையில் கடந்த 10 நாட்களாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக தொழிலாளர்கள் சிலர் சென்றனர். நேற்று இறுதி கட்ட பிரசாரத்தில் பங்கேற்பதற்காக ஈரோடு மற்றும் திருப்பூர், கோவை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் சென்றனர்.