வருசநாடு, பிப். 25: கண்டமனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சக்தி தலைமையில், முதுகலை ஆசிரியர் ராமசாமி முன்னிலையில் மாணவர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறப்பினையும், அதன் செயல்பாட்டையும் எடுத்துரைத்து ஒருங்கிணைத்து மாணவர்களை திறன்பட பணியாற்றவும், அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வையும் சமூக பொறுப்புகளையும் எடுத்துரைத்து மாணவர்களை தயார்படுத்தப்பட்டனர்.