டிப்பர் லாரி மோதி வாலிபர் சாவு

திருச்சி,பிப்.23: திருச்சி சென்னை பைபாஸ் சாலை ரயில்வே பாலம் அருகே டிப்பர் லாரி சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது அந்த வழியாக சாலையில் நடந்து சென்ற சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அந்த வாலிபர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக இறந்தார். விபத்தில் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: