திருக்காட்டுப்பள்ளி,பிப். 22: திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட்டில் வாழைத்தார் பழுக்க ரசாயனம் தெளிக்கப்படுகிறது. இதனால் வாழைப்பழம் வாங்க பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் காய், கனி, விற்பனை செய்ய தனியாக ஒரு மார்க்கெட்டும், வாழைத்தார் விற்பனை செய்ய தனியாக ஒரு மார்க்கெட்டும் உள்ளது. இந்த மார்க்கெட்டில் நவீன முறையில் புதிய கடைகள் கட்டுவதற்கும் வாழைத்தார்கள் பழுக்க வைக்க தனியாக கொடாப்பு கட்டுவதற்கும் அங்கிருந்த பழைய கடைகளை இடித்து அப்புறப்படுத்தப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனால் வாழைத்தார் விற்பனை செய்ய காய்கனி மார்க்கெட் அருகில் ஏலக்கடைகள் இயங்கி வருகிறது. இந்த காய், கனி மார்க்கெட்டிற்கு உருளைகிழங்கு, முட்டை கோஸ், பீட்ரூட், கேரட், மற்றும் பல்வேறு காய், கனிகளை திருச்சி மார்க்கெட்டிலிருந்து தினமும் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். மற்ற காய், கனிகள் மற்றும் வாழைத்தார் போன்ற வகைகளை சுற்றுவட்டார பகுதியில் விளையும் விவசாய நிலத்திலிருந்து விவசாயிகள் கொண்டுவந்து இங்கு வந்து தான் விற்பனை செய்து வருகின்றனர்.வாழைத்தார்களையும் விற்பனை செய்து வருகின்றனர். இதில் அனைவரும் வாழைபழத்தை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். சிறுவர்,சிறுமியர், பெரியவர்கள் என பாகுபாடின்றி வாழைப்பழத்தை சாப்பிட்டு வருகின்றனர்.