செய்யூர், அக்.1: கடுக்கலூர் கிராமத்தில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. தமிழகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக சற்று காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனால், காய்ச்சல் உள்ள பகுதிகளை கண்டறிந்து மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என சுகாதார துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் கடுக்கலூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ திட்ட மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி அனைவரையும் வரவேற்றார்.