கடலூர், அக். 1: சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 16ம் தேதி முதல் அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில் அவரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. சவுக்கு சங்கரை பணிநீக்கம் செய்வதற்கான விளக்க நோட்டீசை, சிறையில் இருக்கும் அவருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிறை அதிகாரிகளுடன் வழங்க சென்றனர். ஆனால் அந்த நோட்டீசை வாங்க சவுக்கு சங்கர் மறுத்துவிட்டார். இதைதொடர்ந்து அந்த விளக்க நோட்டீஸ் அவர் சிறையில் இருக்கும் அறை வாசலில் ஒட்டப்பட்டது.