நாகர்கோவில், அக்.1 : புள்ளி இயல் துணை இயக்குநர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது மக்களிடையே ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி) குறித்த விழிப்புணர்வு, அதன் பயன்பாடு மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள், கல்வி, கணினி பயன்பாடு போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பானது ஜூன்-2023 வரை நடைபெற உள்ளது. இந்த தேசிய மாதிரி ஆய்வு திட்டத்தின் வாயிலாக 79-வது சுற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 கிராமங்களிலும், நகர்புற பகுதிகளில் 12 இடங்களிலும் மாதிரி கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.