திருப்பூர்,அக். 1:திருப்பூர், கொங்கு மெயில் ரோட்டில் நேற்று சந்தேகத்திற்கிடமாக இருந்த வாலிபரை பொதுமக்கள் சுற்றிவளைத்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து விட்டு பைக்கை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடினார். இது குறித்து பொதுமக்கள் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு சக்கர வாகனத்தை மீட்டு சோதனை நடத்தினர். போலீசார் சோதனையில் அந்த வாகனத்தில் செல்போன் மற்றும் கவரிங் நகைகள் இருந்தது.