மூணாறு, அக். 1: இடுக்கி வண்டி பெரியாறில் தனியார் பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிப்பெரியார் காவல் நிலையம் அருகே நேற்று காலை 9.30 மணியளவில் தொடுபுழாவில் இருந்து குமுளியை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும், குமளியில் இருந்து முண்டக்காயம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள், லாரி டிரைவர், க்ளீனர் என 25 பேர் காயமடைந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.