ராமநாதபுரம், அக். 1: தெற்குத்தரவை ஊராட்சி அம்மன் கோவில் ஊரணி, வைரவன் கோயில் பகுதிகளில் பனை விதை நடவு பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்து பேசுகையில், ‘‘கண்மாய், ஊரணி, நீர்வரத்து கால்வாய் கரையோர பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்து பராமரிக்கும் போது பனை மரங்கள் வளர்ந்து பல்வேறு பயன்கள் தருகின்றன. இந்த மரங்களால் கரைப்பகுதிகள் பலப்படுகின்றன. மண் அரிப்பு தடுக்கப்படும். தண்ணீர் பாதுகாக்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க பனை மரங்கள் பாதுகாப்பு அரணாக உள்ளன. கிராம பகுதிகளில் தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயனுள்ள வகையில் இத்திட்டம் உள்ளது. நடப்பாண்டில் மாவட்டத்தில் 6 லட்சம் பனை விதை நடவு செய்து பராமரிக்கும் வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.