வயலில் அறுந்து கீழே கிடந்த மின் கம்பியை மிதித்த மூதாட்டி பலி

 

மயிலாடுதுறை, ஜூலை 27: மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் ஊராட்சி கொற்றவநல்லூர் குடியான தெருவை சேர்ந்தவர் அஞ்சாயாள்(59). இவரது கணவர் இறந்து விட்டார். இவரது 3 மகள்களுக்கும் திருமணமானதால் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.இந்தநிலையில் நேற்று வயலில் மேய்ச்சலுக்காக கட்டியிருந்த மாடுகளை வீட்டுக்கு ஓட்டி வருவதற்காக ராமர் என்பவருக்கு சொந்தமான வயலில் நடந்து சென்றார். அப்போது வயலில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் அஞ்சாயாள் மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி அஞ்சாயாள் அந்த இடத்திலேயே பலியானார்.மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அஞ்சாயாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post வயலில் அறுந்து கீழே கிடந்த மின் கம்பியை மிதித்த மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Related Stories: