பரமக்குடி, அக். 1: பரமக்குடி தொகுதியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ முருகேசன் வழங்கினார். பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பார்த்திபனூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் வேல்முருகன் தலைமை வகித்தார், நெல்மடூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார், பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கலந்து கொண்ட பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் 94 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு,