மேலூர், அக். 1: மேலூரில் வங்கியில் இருந்து எடுத்து சென்ற ரூ. 1.29 லட்சத்தை வழிப்பறி திருடர்கள் பறித்து கொண்டு தப்பினர். மேலூரை சேர்ந்த ஜெயபிரகாஷ் மகன் சேதுராமலிங்கம்(44). இவர் நேற்று மதுரை சாலையில் உள்ள கனரா வங்கியில், நகையை அடமானம் வைத்து, ரூ. 1.79 லட்சம் வாங்கி உள்ளார். பின் ரூ. 50 ஆயிரத்தை தனியாக வைத்து கொண்டு, ரூ.1.29 லட்சத்தை தனியாக வைத்து கொண்டு, தனது டூவீலரில் மேலூர் சிவகங்கை சாலையில் சென்று கொண்டிருந்தார்.