திருச்சி,செப்.30: பெரம்பலூர் கரும்பு ஆலையில் இருந்து 20ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள லாரியில் ஸ்பிரிட் தயாரிக்க பயன்படுத்தும் மொலாசிஸ் என்ற கழிவை லால்குடி காட்டூர் சர்க்கரை ஆலைக்கு ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள லால்குடி பிரிவு சாலையில் திரும்பும்போது அருகில் இருந்த சிறு பள்ளத்தில் டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. லாரியின் பழு தாங்காமல் அந்த பள்ளத்தில் இருந்த மண் சரிந்து பெரிய குழியாக மாறியதால் லாரி தலை கீழாக கவிழ்ந்து அதில் இருந்த மொலாசிஸ் அனைத்தும் அந்த பள்ளம் முழுவதும் நிரம்பியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீசார் விரைந்து வந்தனர்.